வாகன நெரிசல்களினூடே வலமிருந்து இடமாக பிரதான
சாலையைக் கடக்கும் குறுகிய
நேரத்திற்குள் காலம் காலாவதி
ஆகிவிடுமென அலுத்துக்கொண்டே கடக்க யத்தனிக்கிறார்கள் சிலர்..
அவசர அவசரமாக கைகளை நீட்டியபடி சாலையின் நெரிசலுக்குள் திட்டுகளுக்கு செவி மடுக்காமல் கடந்தும் விடுகிறார்கள் சிலர்..
அமைதியாக முதுமையின் பிரதான நிதானமாய் காத்துமிருக்கிறார்கள் சிலர்..
சாலையைக்கடக்கும் அவசரத்தில்
அலைபேசியைத் தவறவிட்டு,தவறாமல் எடுத்தும் சென்று விடுகிறார்கள் சிலர்..
சிலர்களில் ஒருவனாய் நானும்,திட்டுவாங்கியபடியோ,தவறவிட்டபடியோ கூட்டத்தோடு
கூட்டமாய்க் கடந்து கொண்டிருப்பேன்,குறுங்கணப் பொழுதில் யாசகம் கேட்ட குழந்தையின் பசி நிறைந்த கண்களை கண்டு கொள்ளாமல்..
நின்று கவனித்து யாசகமிடாமல் கடந்த சாலையில் அக்குழந்தையின் ஏக்கக் கரங்கள் எழுதியிருக்கும் வலமிருந்து இடமாக இடம் பெயர்ந்த மனிதம்
மறந்த சதைப்பிண்டங்களின் மரண விதிகளை..!!
-- பாலா .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக